search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirupampuram"

    தமிழ்நாட்டில் ராகுவுக்கான பரிகாரத்தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக்கரையில் அமைந்திருக்கிறது என்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத்தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது.
    திருப்பாம்புரம் ஆலயத்தின் ராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார்.

    அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராட்ச மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

    கோவிலில் உள்ள சட்ட நாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷ மானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.

    திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. கிழக்கில் பைரவர் சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், ராகு கேது, நாயன்மார் நால்வர், ஆகியோர் காட்சி தருகின்றனர்.பாம்புசேரர் கோவில் கருவறை அர்த்தமண்டபம், மகா மண்டம், முகமண்டபம் என அமைந்துள்ளது.

    மகாமண்டபத்தில் உற்சவ திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வனையுடன் முருகர் போன்றோர் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

    இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் லிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது.

    சேடபுரீஸ்வரர் கோவில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். ராகுவும் கேதுவும் திருக்கோவிலின் ஈசானிய மூலையில் ஏகாசரி ரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார்கள்.

    தலதீர்த்தமான ஆதிசேஷதீர்த்தம் கோவிலின் எதிரில் உள்ளது. தீர்த்தத்தின் நடுவே, ஆதிசேஷன் சுதை வடிவம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். காவிரி ஆற்றின் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 50-வது தலம் இது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

    இந்தக்கோவில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, கும்பகோணம் நாகநாதர் கோவில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற தலம். இங்கே ஆதிசேஷனுக்கு உத்சவர் விக்ரகம் உள்ளது சிறப்பு.

    தமிழ்நாட்டில் ராகுவுக்கான பரிகாரத்தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக்கரையில் அமைந்திருக்கிறது என்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத்தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது.

    இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும் சிற்பம். அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன், குளிகன், சங்கன் ஆகிய 8 நாகங்களின் கூட்டணிதான் இந்த சர்ப்பக் கோலம். இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது.
    திருப்பாம்புரம் இறைவனுக்கு பாம்புரீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், பாம்புரேசர் என்றும் பெயர்கள் உண்டு. இந்த கோவிலின் 35 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. இறைவனை மாதினை இடம் வைத்த எம் வள்ளல் என இத்தலத்தை தேவாரம் போற்றுகிறது.

    2. ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம் களத்திர தோஷம், புத்திர தோஷம், 18 வருட 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது, புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

    3. ஏனைய கோவில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராகுவும், கேதுவும் ஒரே உடலில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு.

    4. பாம்புரத்தில் பூஜை பண்ணிப் பதம் பெற்றோர் பன்னிருவர் என்று தல புராணம் குறிப்பிடுகிறது. ஆதிசேஷன், பிரம்மன், பார்வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட் சோழன் ஆகியோர் இந்தப் பன்னிருவர்.

    5. மகா சிவராத்திரி அன்று இரவு முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்துக்கும் வந்து வழிபட்டு ஆதிசேஷன் விமோசனம் பெற்றதாக வரலாறு.

    6. இந்த ஊரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும், யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராணம் கூறுகிறது.

    7. சுவாமி, அம்பாள், ராகு, கேதுவுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை முடிந்தபின் உளுந்துப் பொடி, கொள்ளுப் பொடி, அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.

    8. மகாசிவராத்திரி, ராகு, கேதுப் பெயர்ச்சி விழா இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    9. திருப்பாம்புரம் இறைவனுக்கு பாம்புரீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், பாம்புரேசர் என்றும் பெயர்கள் உண்டு.

    10. இறைவிக்கு பிரமராம்பிகை, வண்டார் குழலி, வண்டுசேர்குழலி, மாமலையாட்டி. வண்டார் பூங்குழலியம்மை என்ற பெயர்கள் இருக்கிறது.

    11. இத்தலத்தில் ராஜவிநாயகர், சட்டநாதர். ராகு-கேது ஏகசன்னதி. முருகன்-வள்ளி,தெய்வானை, வன்னிமரத்தடியில் ஆதி பாம்புரேசர்-வன்னீஸ்வரர் சன்னதி. திருமால், பஞ்சலிங்கங்கள், பிரமன், சோமாஸ்கந்தர், நடராஜர், சன்னதிகள் உள்ளன.

    12. சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.

    13. ராஜகோபுர வாயிலைத் தாண்டி உட்சென்றால் இடப்பால் திருமலையீசர் சன்னிதி உள்ளது. இக்கோயிலின் கன்னி மூலையில் நின்று பார்த்தால் திருவீழிமிழலை விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. தற்போது மரங்கள் மறைக்கின்றன.

    14. சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

    15. வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணி வித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    16. மாசி மாதத்தில் - தீர்த்தவாரி - பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.

    17. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122-வது தேவாரத்தலம் ஆகும்.

    18. இந்தக் கோயிலில் மொத்தம் 15 கல்வெட்டுகள் உள்ளன. அதில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒன்று. அவரின் காலம் கி.பி.1178-1218 என்று இருப்பதால், இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று அறிய முடிகிறது.

    19. இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

    20. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக் கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

    21.திருபாம்புரம் தலம் சர்வதோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன.

    22. திருபாம்பு சுற்றிய புறம் என்பதே பெயர் மருவி திருப்பாம்புரம் என ஆகிவிட்டது.

    23. ராகுவையும், கேதுவையும் இணைத்துக் காட்டும் அஷ்டமகா நாகம் எனும் சிலை இத்தலத்தில் உள்ளது.

    24. திருப்பாம்புரம் ஆலயத்துக்கு விஜயம் செய்பவர்கள் முதல் ஜாமத்தில் குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரத்தில் நாக நாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தின் பாம்புர நாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி விட்டு வந்தால் மட்டுமே முழுமையானப் பலனைப் பெற முடியும் என்கிறார்கள்.

    25. தல விருட்சமான வன்னி மரத்தில் பிரார்த்தனைக்காக குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுகிறார்கள்.

    26. ஆதிசேஷன் இந்த தலத்துக்கு வந்தபோது இறைவனை துதித்து வழிபட அமைத்தக் குளமே சிற்றம்பலக் குட்டை என்ற பெயரில் உள்ள குளமாகும்.

    27. இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் நீண்ட காலமாக உடல் நலமற்று இருப்பவர்கள் உடல் நலம் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    28. ஆலயத்துக்கு விஜயம் செய்தால் எங்கெங்கு எந்த வரிசையில் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்பதை எழுதி வைத்து உள்ளார்கள்.

    29. ஆலயத்தின் தல விருட்சமான வன்னி மரத்தடியில் உள்ள நாகத்திற்கு மஞ்சள் கட்டிய நூலைக் கட்டி தாலிபாக்கியம் பெற வேண்டுகிறார்கள்.

    30.ஆலய சன்னதியில் ராகு -கேது சன்னதி உள்ளது. இதன் முன்னால்தான் எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

    31. பாம்பு வழிபட்ட தலம் என்பதால் மூலஸ்தானத்தில் எப்போதாவது இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    32. தல விருட்சமான பெரிய வன்னி மரத்தின் அடியில் வன்னி ஈஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த வன்னி மர ஈஸ்வரரை, பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு மரத்தில் கட்டி தொங்க விட்டால், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

    33. சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம்.

    34. இத்தலத்திற்கு பாம்புரம் தென்காளஹஸ்தி என்ற பெயர் உண்டு.

    35. திருஞானசம்பந்தர் இயற்றி உள்ள இத்தலத்துக்கான பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    திருப்பாம்புரம் கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
    உலகையே காத்தருளும் சிவபெருமான் எப்போதும் யோகநிலையில் இருக்க கூடியவர். அவரின் கழுத்தில் அணிகலனாக இருக்க கூடிய நாகம் அந்த சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி அதிலிருந்து விடுதலை பெற வழிபட்ட கோவில் தான் தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் “திருப்பாம்புரம் கோவில்”.

    புராண காலத்தில் விநாயகர் தனது தந்தையான சிவபெருமானை வழிபடும் போது, அவர் கழுத்தில் இருந்த நாகம் தன்னையும் விநாயகர் பூஜிப்பதாக எண்ணி கர்வம் கொண்டது. இதையறிந்த சிவபெருமான் அனைத்து நாகங்களும் துன்புறுமாறு சாபமளித்து விட்டார்.

    ஆதிசேஷன் உட்பட எல்லா நாகங்களும் இந்த திருப்பாம்புரம் கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஒரு மகா சிவராத்திரி தினத்தன்று வணங்கி சாப விமோச்சனம் பெற்றனர். இத்தலத்திற்கு “சர்பபுரி” என மற்றொரு பெயர் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனை “பாம்புரநாதர்” என்றும் “சேஷபுரீஸ்வரர்” மற்றும் “சர்பேஸ்வரர்” என்றும் அழைக்கின்றனர்.

    இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோவில் பகுதிகளில் மல்லி மற்றும் தாழம்பூ மலர்களின் வாசம் வீசுவதாகவும் இதற்கு காரணம் இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவனின் சக்தியே என பக்தர்கள் கூறுகின்றனர். மற்றுமொரு அதிசயமாக இக்கோவில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எவரையும் இத்தனை ஆண்டு காலமாக எந்த பாம்பும் தீண்டிய தில்லை என கூறுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.

    சர்ப்பதோஷம் அல்லது “நாகதோஷத்தால்” பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும். அதோடு வழிபட இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.

    வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 7.30 லிருந்து மதியம் 12.30 வரையிலும் மாலை 4.00 லிருந்து இரவு 8.00 மாலை வரை திறந்திருக்கும்.
    வாயு, ஆதிசேஷன் போட்டியினால் சினம் அடைந்த சிவனிடம் சாபம் பெற்ற ஆதிசேஷன் 12 ஆண்டுகள் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் திருப்பாம்புரம்.
    சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற 59-வது திருத்தலம் இது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வேட்டு கோவிலில் காணப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் செங்கற் கோவிலாக இருந்த கோவில்தான் கற்கோவிலாக மாற்றம் அடைந்தன. அதில் இந்தக் கோவிலும் ஒன்று.

    பாம்பு+ புரம்- ஆதிஷேசன். வாயு, ஆதிசேஷன் போட்டியினால் சினம் அடைந்த சிவனிடம் சாபம் பெற்ற ஆதிசேஷன் 12 ஆண்டுகள் வழிபட்டு சாபம் நீங்கிய தலம். பிரம்மா, இந்திரன், பார்வதி, அக்னி, தட்சன், அகத்தியர், ஆதிசேடன், சுனிதன், கங்காதேவி, சந்திரன், சூரியன் ஆகியோர் வழிபாடு செய்து பலன் பெற்றுள்ளனர்.

    வடமொழிக்கு ஈடானது தமிழ் என தேவர்கள் முனிவர்களுக்கெதிராக வாதிட்ட அகத்தியர் ஊமையாக சாபம் பெற்று இங்கு சிவராத்திரி 1ம் சாமத்தில் வழிபட்டு சாபம் நீங்கினார்.

    பிரம்மா தன்னால் படைக்கப்பட்ட திலோத்தமையின் அழகில் மயங்கி சாபமடைந்து இங்கு ஓராண்டு வழிபட்டு சாபம் நீங்கியது.

    தட்சன் வேள்வியில் கலந்து கொண்ட அக்னி சாபமடைந்து இங்கு சிவராத்திரி 2-ம் சாமத்தில் வழிபட்டு பேறு பெற்றார்.

    சிவனின் கண்களை மூடிய பார்வதி 12 ஆண்டுகள் இங்கு தவமிருந்து சிவராத்திரி 4ம் சாமத்தில் வழிபட்டு பேறு பெற்றார்.

    தட்சனின் யாகசாலை சிதைத்து தலையை வீரபாகு வெட்ட தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தி தட்சனின் உடலில் ஆட்டுத்தலையை ஒட்டி உயிர்பிக்க கர்வம் அடங்கி 12 ஆண்டுகள் பூஜை செய்து சிவராத்திரி 4ம் சாமத்தில் பேறு பெற்றார்.

    கங்கை தன்னிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்க இங்கு பூஜை செய்து சிவராத்திரி 2ம் சாமத்தில் பேறு பெற்றார். சூரியன் கங்கையில் நீராடி மயூரநாதரை வழிபட்டு பாம்புரத்தில் 1000 பூக்களால் 12 ஆண்டுகள் அர்சித்து தன்னுடன் ஒளியை கூட்ட அருள் பெற்றான்.

    சுனிதன் தன்னுடைய முயலகன் நோய் தீர வழிபட்டான். கோச்செங்கட் சோழன் குட்ட நோய் தீர வழிபாடு. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்..

    இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது..

    ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். இந்திரன் சாபம் நீங்கிய தலம். கங்கை பாவம் தொலைந்த தலம்.
    சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது.

    ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.

    திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது நம்பிக்கை. பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் போன்றோர் பூஜை செய்த தலம்.

    அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை. ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை. இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும். சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

    ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.
    ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள். பாம்(பு)புரம் ஈசுவரன் கோவிலில் ராகு, கேது குடியிருக்கிறார்கள். இது நல்ல பரிகாரத்தலமாக விளங்குகிறது.

    இக்கோவில் ‘தென் காளத்தி’ என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் மீது சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர்.

    இந்த ஆலயம் பற்றி இரு புராணக்கதைகள் உள்ளன. முதல் தல புராண கதை வருமாறு:-

    முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.

    இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதி சேஷனை திருப் பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதி சேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

    மற்றொரு தலபுராணம் வருமாறு:-

    கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.

    நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகாபத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆலமர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.

    மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.
    சர்ப்ப தோஷங்களுக்கு திருப்பாம்புரம் கோவிலில் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கோவிலில் பரிகாரம் செய்யும் முறையை பார்க்கலாம்.
    1. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால்
    2. 18 வருட ராகு தசா நடந்தால்
    3. 7 வருட கேது தசா நடந்தால்
    4. லக்னத்திற்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ, ராகுவோ இருந்தால்
    5. ராகு புத்தி, கேது புத்தி இருந்தால்,
    6. களத்திர தோஷ­ம் இருந்தால்,
    7. புத்திர தோஷ­ம் இருந்தால்,
    8. ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் தடைபட்டால்
    9. கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்,
    10. தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால்,
    11. கடன் தொல்லைகள் இருந்தால்.

    இவை அனைத்தும் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட்டால் நிவர்த்தி கிடைக்கும்.

    வழிபாடு செய்வது எப்படி?

    இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பிறகு வஸ்திர தானம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து திருக்கோயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி அச்சு ரசீதுப் பெற்றதும், பரிகாரத்திற்கு உரிய அபிஷேக சாமான்கள், வெள்ளி நாகம், பால் வழங்கப்படும்.

    ஆலய அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் வெள்ளி நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் ராகு, கேது பகவானுக்கு அபிஷேகம் செய்து, நீலம் மற்றும் பலவண்ண ஆடைகள், மல்லிகை, செவ்வரளி, நாகலிங்க பூ இவைகளில் ஏதேனும் ஒன்றை சாற்றி உளுந்து, கொள்ளு பொடி நிவேதனம் செய்து, பின்னர் அன்னதானம் வழங்க வேண்டும். முடிவில் புற்றுகோயில் வழிபாடு செய்வதின் மூலம் அவரவர் தோஷங்கள் விலகிவிடும் என்பது திண்ணம்.

    ×