என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirowpathi"
- திருவிழாவில் 576 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
- திருவிழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
சிவகிரி:
சிவகிரி வட்டாரத்தில் பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
நேற்று மாலை கிருஷ்ணர், திரவுபதிஅம்மன், அர்ச்சுனர் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவில் முன்பாக உள்ள திடலில் இருந்து புறப்பட்டு சப்பரத்திற்கு முன்பாகவே சென்று முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 6.30 மணி அளவில் 576 பேர் பூக்குழி இறங்கத் தொடங்கினர். முதலில் கோவில் பூசாரி மாரிமுத்து பூ இறங்கினார்.
தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கினர். 7.30 மணியளவில் அனைவரும் பூ இறங்கி முடித்தனர்.
திருவிழாவில் பேரூராட்சி பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர், ராணி கருப்பாயி நாச்சியார் கோவில் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன்,
உதவியாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், வீரசேகரன், தலையாரிகள் அழகுராஜா, வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பூக்குழித் திருவிழாவை காண சிவகிரி மற்றும் ராயகிரி, வாசுதேவநல்லூர், தளவாய்புரம், சேத்தூர், கரிவலம்வந்தநல்லூர் போன்ற பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்