என் மலர்
நீங்கள் தேடியது "Theipirai Sashti Worship"
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் வட்டார பகுதியில் உள்ள மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில்சித்திரை மாததேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதே போல பல்லடம் காந்தி ரோடு பால தண்டாயுதபாணி கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைநடைபெற்றது இதில் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






