search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The youths extorted money from"

    • ஒரு மோட்டார்சைக்களில் 2 வாலிபர்கள் வந்தனர்.
    • பின்னால் அமர்ந்து இருந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரின் கைப்பையை பறித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே பரிசல் துறையில் பெட்ரோல் பங்க் ஒன்று தனியார் ஏஜென்சி மூலம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் பெட்ரோல் பங்க் ஊழியர் கலெக்ஷன் தொகையை சரி பார்த்து மொத்தமாக எடுத்து கைப்பையில் வைத்திருந்தார்.

    மேலும் பெட்ரோல், டீசல் போட வந்த வாடிக்கையாளர்களிடம் தொகையை வசூலித்தவாறு இருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார்சைக்களில் 2 வாலிபர்கள் வந்தனர். பின்னால் அமர்ந்து இருந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரின் கைப்பையை பறித்தார்.

    உடனடியாக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நிற்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றனர்.

    இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    கைப்பையில் பெட்ரோல், டீசல் விற்பனை கலெக்ஷன் ரூ.50 ஆயிரம் இருந்ததாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

    ×