என் மலர்
நீங்கள் தேடியது "The worker committed suicide"
- கடந்த சில நாட்களாக பெரியசாமி பல்வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- இதனால் விரக்தி அடைந்த பெரியசாமி எலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு மயங்கினார்.
ஈரோடு:
ஈரோடு ரங்கம் பாளையம் இரட்டை பாலி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47). இவர் சிப்ஸ் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதனால் விரக்தி அடைந்த பெரியசாமி வீட்டில் எலிதொல்லைக்காக வைத்திருந்தஎலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு மயங்கினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய சாமிஇறந்து விட்டார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.