search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The water level of Perumpallam dam"

    • பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 12.13அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வர த்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 72.55 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடி 448 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.74 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.13அடியாகவும்,

    வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடியாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    ×