search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the show"

    • 12 ஆயிரம் செம்பொன்னை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • 108 திருக்கையிலாய வாத்தியங்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

    கடலூர்:

    நடு நாட்டு சிவதலங்களில் 2-வது தலமான காசியை விட வீசம் அதிகம் என போற்றப்படும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் சைவத்தின் முதல் தொண்டர் தம்பிரான் தோழர் நம்பி ஆரூரார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதுகுன்றத்து முழு முதல் பழமலைநாதர் பெருமானிடம் 12000 பொற்காசுகள் பெற்று மணிமுத்தா நதியில் விடும் தொன்மையான பெருவிழா கொடியேற்ற துடன் தொடங்கியது.

    இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு 21 திருமஞ்சனம் அலங்கா ரம் மகேஸ்வர பூஜை, முதுகுன்றத்தில் இமையோர் தனி நாயகரிடம் ஏழு இசை இன் தமிழால் பதிகம் பாடி 12 ஆயிரம் செம்பொன்னை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பெருமானிடம் பெற்ற செம்பொன்னை மணிமுத்தா நதியில் இட 108 திருக்கையிலாய வாத்தியங்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் மணிமுத்தா நதியில் உள்ள மாற்று உரைத்த விநாயகர் துணையோடு செம்பொ ன்னை மணிமுத்தா நதியில் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • சமத்துவ எருதுகட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலை மேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு, எருது கட்டு, வடமாடு உரிமை யாளர்கள் நலச்சங்கம் சார்பில் 57-ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்தக்கால் நட்டு காப்பு கட்டும் வை பவம் இன்று நடைபெற்றது.

    வருகிற 19-ந் தேதி காலையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகிக்க உள்ளார்.பொக்கனாரேந்தல், பால் கரை , பள்ளபச்சேரி,முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரிய மடை கோவிந்த னேந்தல், அச்சடிபிரம்பு, அம்மன் கோவில், இந்தியா நகர ்(திருப்புல்லாணி), ஆணைகுடி வீரன்வலசை, தெற்குத்தரவை, கொடிக்குளம், வித்தானூர், எல். கருங்குளம், ஆர். காவனூர், இந்திராநகர் (ராம நாதபுரம்), சிவஞான புரம், அரியகுடி புத்தூர், குமுக்கோட்டை, திருவரங்கம் மற்றும் கைக் கோளர்மடம் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொறுப் பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.

    ×