search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of"

    • தக்காளி விலை விண்ணை தொடும் அளவு உச்சம் அடைந்து வருகிறது
    • காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை குறைந்த காய்கறிகளை மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்

    ஈரோடு

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு மேட்டுப்பாளையம், திருப்பூர், ஓசூர், கிருஷ்ண கிரி, மேச்சேரி, ராசிபுரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கொடை க்கானல், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. கடந்த சில நாட்களா கவே காய்கறிகள் விலை திடீரென உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக தக்காளி விலை விண்ணை தொடும் அளவு உச்சம் அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது தான். நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. மார்க்கெட்டுக்கு 2000 தக்காளி பெட்டிகள் வரத்தானதால் தக்காளி விலை நேற்றை விட கிலோ ஒன்றுக்கு ரூ. 20 குறைந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகி றது. சுமாரான தக்காளிகள் ஒரு கிலோ ரூ.90 -க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் ஓரளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கருப்பு அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ் கேரட், இஞ்சி, சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

    இதனால் முன்பு காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கி சொல்லும் மக்கள் தற்போது குறைந்த அளவில் 200, கால் கிலோ என்ற அளவில் வாங்கி செல்கின்றனர். இன்று வ.உ.சி. மார்க்கெட்டுக்கு 80 டன்கள் காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று மா ர்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    பீட்ரூட்-60, கேரட் - 80, பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 130, பச்சை மிள காய் - 120, சவ்சவ் - 30, பீன்ஸ் - 130, வெண்டை க்காய் - 30, கத்திரிக்காய் - 60, பாவக்காய்-60, பீர்க்கங்காய் - 70, புடல ங்காய் -70, இஞ்சி-230 - 250, முருங்கை க்காய் - 50, உருளைக்கிழங்கு - 35, முட்டைகோஸ் - 30, காலிங் பிளவர் -40, சின்ன வெங்காயம்-80-90, பெரிய வெங்காயம் - 30.

    காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை குறைந்த காய்கறிகளான வெண்டை க்காய், புடல ங்காய் சுரக்காய், போன்ற காய்கறி களை மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். 

    • பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது
    • இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

    ஈரோடு

    ஈரோடு வ. உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திண்டுக்கல், கிணத்துக்கடவு, மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், தாளவாடி, சத்தியமங்கலம். கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 3 டன் முருங்கை க்காய் லோடு வருவது வழக்கம்.

    இந்நிலையை கடந்த சில நாட்களாக பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் முருங்கைக்காய் விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று மார்க்கெட்டிற்கு வெறும் அரை டன் முருங்கைக்காய் மட்டுமே வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.60-க்கு விற்ற முருங்கைக்காய் இன்று ரூ.160 முதல் ரூ.180 வரை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.

    வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    பீன்ஸ்-30, வெண்டைக்காய்-30, கேரட்-60, பீட்ரூட்-60, கத்தரிக்காய்-70, புடல ங்காய்-40, பீர்க்கங்காய்-40, பாவைக்காய்-40, சுரைக்காய்-20, மிளகா-50, தக்காளி-ரூ.10 முதல் ரூ.15, சின்னவெங்காயம்-80, பெரியவெங்காயம்-40, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-40, உருளைக்கிழங்கு-40.

    ×