search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the mysterious person"

    • சாலையின் ஓரத்தில் ஆவின் பால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
    • இந்த சம்பவம் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.

    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையின் ஓரத்தில் ஆவின் பால் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆட்டோவில் சென்ற வாலிபர் திடீரென்று தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பெட்டியை லாவகமாக திருடி கொண்டு சென்றார்.

    இதனைத் தொடர்ந்து பால் எடுப்பதற்காக வந்த நபர் பால் மற்றும் பெட்டியை காணவில்லை என தேடினார். பின்னர் மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த காட்சி வைரலாகி வருகின்றது. அதனை வைத்து அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்..
    • சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை,யாரோ மர்மநபர் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்புவனகிரி பகுதி சேர்ந்தவர் மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு வடலூர் செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்.

    சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை. ,என்ற சந்தேகத்தில் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×