search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tharangambadi"

    • கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.
    • மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தரங்கம்பாடியில் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 192 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் தானே புயல், மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் உள்வாங்கி சேதமடைந்தது.

    கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவா் மற்றும் கான்கிரீட் பாதையில் கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.

    இதில், அந்த தூண்டில் வளைவு தடுப்புச் சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றார்.

    மேலும் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வும், துறைமுகத்தில் கண்கா ணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டு மென்றும்,கட்டுமானப் பணிகளை தரமாக செய்யவேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

    மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜூவ், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • மாநில அரசு உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
    • கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடுஇன்றி உரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு, பேரிடர் நிதி முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை. அப்படிபட்ட சூழலிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மாநில அரசு உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மேகதாது அணைகட்டுவோம் என்று கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்த்து அறிக்கை விடுவதோடு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்திருக்கிறது. அதற்கான இடுபொருட்கள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடுஇன்றி உரம் வழங்க வேண்டும். நெல்லுக்கான ஊக்கத்தொ கையை காலத்தில் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராசு, மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×