search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரங்கம்பாடியில், மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் ஆய்வு
    X

    தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் முதன்மை செயலாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.

    தரங்கம்பாடியில், மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் ஆய்வு

    • கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.
    • மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தரங்கம்பாடியில் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 192 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் தானே புயல், மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் உள்வாங்கி சேதமடைந்தது.

    கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவா் மற்றும் கான்கிரீட் பாதையில் கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது.

    இதில், அந்த தூண்டில் வளைவு தடுப்புச் சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றார்.

    மேலும் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வும், துறைமுகத்தில் கண்கா ணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டு மென்றும்,கட்டுமானப் பணிகளை தரமாக செய்யவேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

    மார்ச் மாதத்தில் துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜூவ், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×