என் மலர்
நீங்கள் தேடியது "Terrible accident"
- வடமதுரை போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அரசு பஸ் டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- திருச்சி- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து கம்பம் நோக்கி அரசு சொகுசு விரைவுபஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலைதடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் (46) என்பவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த சாகுல் ஹமீது (35), மரிய ஜோசப் லியோனி (51), செந்தில்குமார் (46), ராஜா (60), முகமது ஆயில் (14), ஆயிஷா பேகம் (34), முகமது அஜிபுல் (16), சுதாகர் (32), ராஜேஷ் (33), சரவணன் (51), செல்வராஜ் (73) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வாகனங்களை அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும்தி.மு.க. நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க.செயலாளராக ராஜா இருந்து வருகிறார். இவரது மனைவி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு கடலூரில் இருந்து திருச்சி நோக்கி மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும்தி.மு.க. நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரி ஒன்று எதிர்பாராமல் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சென்ற கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.
அப்போது இவர்களுடன் மற்றொரு காரில் வந்ததி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து காரில் இருந்த ராஜா மற்றும் நிர்வாகிகளை சென்று பார்த்த போது அனைவரும் லேசான காயத்துடன் தப்பியது தெரிய வந்தது.. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்து உருக்குலைந்தது. இதனைத் தொடர்ந்து மேயர் கணவர் தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கடலூருக்கு இன்று அதிகாலை வந்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்டதி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் கணவர் ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.






