search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary teacher work"

    தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக நேற்று மாலை வரை 3,850 பேர் விண்ணப்பித்து உள்ளனர். #JactoGeo #Temporaryteachers
    தர்மபுரி:

    புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால், நடுநிலை, தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முழு ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு அறிவித்து உள்ளது.

    முதலில் அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக டி.டி.எட். மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    நேற்று மாலை வரை 3,850 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 900 பேரும் அடங்குவார்கள். மனு கொடுத்தவர்களிடம் இருந்து திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். #JactoGeo #Temporaryteachers

    ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நிமனத்திற்கு ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.
    சிவகங்கை:

    9அம்ச கோரிக்கை தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை, இதனால் அரசு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணிக்கு நியமிக்க முடிவு செய்துள்ளது.

    அதைத்தொடர்ந்து நேற்று சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பகல் 2 மணி வரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஆசிரியர் பணி வேண்டி விண்ணப்பங்களை கொடுத்தனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 1,115-ம், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவைகளில் 7 ஆயிரத்து 586 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் 5ஆயிரத்து 355 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் இவர்களில் நேற்று 119 பேர் மட்டும் பணிக்கு வந்து விட்டனர். பணிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 28-ந் தேதி பணிக்கு வரவில்லை என்றால் பெற்றொர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7ஆயிரத்து 500 வழங்கப்படும். இதையடுத்து தற்போது ஏராளமானவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக தங்களின் விண்ணப்ப மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    ×