என் மலர்
நீங்கள் தேடியது "temples early in"
- ஈரோடு மாவட்ட த்தில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பவானி கூடுதுறைக்கு அதிகாலை ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
ஈரோடு:
மார்கழி மாதம் பிறப்பை யொட்டி ஈரோடு மாவட்ட த்தில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத பிறப்பை யொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.
இதில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடாக மாநில பக்தர்களும் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த பச்சைமலை சுப்பிரமணியசாமி, பவளமலை முத்துகுமார சாமி, கோவில். பாரியூர் கொண்டத்து காளியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோபிசெட்டிபாளையம், சாரதா மாரியம்மன், ஆஞ்சநேயர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபுஷேகம் செய்யப் பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.
இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல் அந்தியூர் பேட்டை பெருமாள், அழகு ராஜ பெருமாள், செல்லீஸ்வரர், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் மற்றும் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்களில் சாமிக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் அந்தியூர், தவிட்டு பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர் கள் பலர் வந்து சாமி தரி சனம் செய்தனர்.
மேலும் பவானி சங்க மேஸ்வரர், செல்லியாண்டியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டது.
பவானி கூடுதுறைக்கு அதிகாலை ஏராளமான பக்தர்கள் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் 3 நதிகள் சங்கமிக்கும் கூடு துறையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் அதிகாலையிலே யே கூடுதுறையில் பக்த ர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதே போல் சத்தியமங்க லம் மற்றும் தாளவாடி மாரியம்மன், ஈரோடு கோட்டை, பெருமாள், ஈஸ்வரன், பெரிய மாரி யம்மன், கொங்காலம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், சத்தி ரோடு எல்லை மாரியம்மன், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஈரோட்டில் பெண்கள் அதிகாலையில் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணியால் பிள்ளையார் செய்து பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர்.






