search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Bills"

    • கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் இக்கோவில் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர். அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார், தீயணைப்பு படையினர் கோவிலுக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சித்தது தெரியவந்தது. மேலும், உண்டியலை திறக்க முடியாததால், காகிதத்தில் தீ வைத்து உண்டியலுக்குள் போட்டிருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது. இதில் உண்டியலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தீயில் கருகியிருக்கலாம் எனவும், நாணயங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து இந்து அறநிலையத் துறையின் திண்டிவனம் ஆய்வாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
    • ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள தையூர் என்ற கிராமத்தில் வேம்பியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை நேற்று மதியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தரைப்பை சேர்ந்தவர்கள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஏற்கனவே தாங்கள் தான் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் அதனால் நாங்கள் உண்டியலை திறந்து எடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தாங்கள்தான் கோவிலை நிர்வகித்து வருவதாகவும் தாங்கள் போட்ட பூட்டை தென்னரசு தரப்பினர் உடைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஏற்கனவே தாங்கள் போட்டு வைத்திருந்த பூட்டை திருமுருகன் தரப்பினர் உடைத்து விட்டதாக கூறி அவர்களும் ஒரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் மேற்படி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த தற்போதைய தலைவர் திருமுருகன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு திருமுருகன் தரப்பினர் சாலை மறியலை கைவிட்டனர்.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×