search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teaching job"

    • 89 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக வுள்ளது.
    • ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி 76 இடை நிலை ஆசிரியர், 7 பட்டதாரி ஆசிரியர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 89 ஆசிரி யர்கள் பணியிடம் காலியாக வுள்ளது. கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், கடலூர், சிதம்பரம், விருத்தா சலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப் பட்டுள்ளது. மேற்கண்ட காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்த னையின் அடிப்படை யிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரிய ருக்கு ரூ.12,000 பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் முது கலை பட்டதாரி ஆசிரிய ருக்கு ரூ.18,000 வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர், ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலி னத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதி களைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரி பார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

    மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம், தேர்வு செய்யப்படும் இடைநிைல பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2024-ம் மாதம் வரை மட்டும் தேர்வு செய்யப்படும். பணி நாடு நர்கள், ஆசிரியர் காலிப்பணி யடங்களை கடலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சி யர் அலுவலகங்களில் தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட காலிப்பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்று ஆவணங்க ளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்ப டைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×