search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taylor committed suicide"

    • வீட்டில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை சண்முகம் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மேற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (56). டெய்லர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை (விஷம்) சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

    உடனடியாக அவரை கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×