என் மலர்
நீங்கள் தேடியது "Tasmac supervisor killed"
ஜேடர்பாளையம் அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38).
இவர் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் ஜேடர்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கள்ளுக்கடை மேட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் கொத்தம்மங்கலம் என்ற இடத்தில் தார்சாலை ஓரமாக டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியில் மின்வெளிச்சம் ஏதும் இல்லை.
இதனால் அந்த பகுதி இருட்டாக இருந்ததால் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த விஜயகுமார், தார்சாலை ஓரமாக டிராக்டர் நிறுத்தி வைத்திருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக அதன்பின்புறத்தில் வேகமாக மோதினார்.
இதில் அவர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். #tamilnews
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38).
இவர் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் ஜேடர்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கள்ளுக்கடை மேட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் கொத்தம்மங்கலம் என்ற இடத்தில் தார்சாலை ஓரமாக டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியில் மின்வெளிச்சம் ஏதும் இல்லை.
இதனால் அந்த பகுதி இருட்டாக இருந்ததால் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த விஜயகுமார், தார்சாலை ஓரமாக டிராக்டர் நிறுத்தி வைத்திருப்பது தெரியாமல் எதிர்பாராத விதமாக அதன்பின்புறத்தில் வேகமாக மோதினார்.
இதில் அவர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். #tamilnews






