search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac protest"

    ஆம்பூர் அருகே டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கைதான 40 பேரை வேலூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அவர் இன்று தீர்ப்பளித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைதான 40 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறினார்.

    இதையடுத்த கைதான 40 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    ×