search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TASMAC OFFICER"

    • திருச்சி டாஸ்மாக் அதிகாரியை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • சுமை தூக்கி பிழைத்து வரும் எங்களிடம் மிரட்டி கமிஷன் கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வேலையும் தர மறுக்கிறார்கள்

    திருச்சி:

    தஞ்சாவூர் காமாட்சிபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது 55). இவர் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், மாவட்டத் துணை தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதியை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

    நான் திருச்சி டாஸ்மாக் கிடங்கில் சுமை தூக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளியாக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். இதனை தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் துணை ஒப்பந்ததாரர்களையும் நியமித்துள்ளார்.

    இந்த நிலையில் மேற்கண்ட ஒப்பந்ததாரர்களிடம் நான் உட்பட 50 பேர் சுமை தூக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

    தற்போது துணை ஒப்பந்ததாரர் மற்றும் அவரது கூட்டாளிகள் சரக்கு ஏற்றி இறக்கும் ஒப்பந்த தொழிலாளர்களாகிய எங்களிடம் ஒரு சரக்கு பெட்டிக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.

    சுமை தூக்கி பிழைத்து வரும் எங்களிடம் மிரட்டி கமிஷன் கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வேலையும் தர மறுக்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாலதி முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தலாம் என்றார். அதற்கு பா.ஜ.க. தரப்பில் எப்போது, எங்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை எழுத்துப்பூர்வமாக பதிலாக தாருங்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×