search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tank Operator death"

    செய்யாறு அருகே மயங்கி விழுந்து டேங்க் ஆப்ரேட்டர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    செய்யாறு பைங்கிணற்றை சேர்ந்தவர் மாதவன் (வயது 40). இவர் திருவத்திபுரம் நகராட்சியில் தற்காலிகமாக டேங்க் ஆப்ரேட்டர் வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மாதவன் நேருநகர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு மாதவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×