என் மலர்
நீங்கள் தேடியது "Tamilnadu Theater Organization"
- "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.
- குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான போய்வா நண்பா சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பாடலை விவேக் வரிகளில் தனுஷ் பாடியுள்ளார். பாடலில் தனுஷின் ஆட்டம் அட்டகாசமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தனுஷின் குபேரா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சர்வதேச கண்காட்சிகளில் தமிழகத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகிறது. அந்த அரங்குகளில் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்தெந்த வகைகளில் எல்லாம் தேவையான சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கப்படுகிறது.
அந்த வகையில் துபாய், அபுதாபி, ஜெர்மனியில் நடந்த தொழில் கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. அந்த அரங்குகள் மூலம் கணிசமான அளவுக்கு தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு நேரில் சென்று தொழில் முதலீடுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் நாளை ‘ஹனோவர் மெசி-2022’ என்ற தலைப்பில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.
ஜெர்மனி தொழில் கண்காட்சியில் தமிழக அரசு சார்பிலும் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ள வாய்ப்புகள் பற்றி அந்த அரங்கில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அரங்கு அமைந்துள்ளது.
ஆற்றல், உற்பத்தி, நெட்வொர்க்கிங், லாஜிஸ்டிக் துறைகளில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த அரங்கு அமைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் தொழில் வழிகாட்டு நிறுவனத்தில் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை உயர் அதிகாரிகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.






