என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tamil Proficiency Test"
- பிளஸ்-1 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த தேர்வை அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த பிளஸ்-1 மாணவ- மாணவிகள் எழுதலாம்.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள், சி.பி.எஸ்.இ., மற்றும் இன்டர்நேசனல் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் பிளஸ்-1 படித்து வருகிறார்கள்.
தேர்வு
இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த பிளஸ்-1 மாணவ- மாணவிகள் எழுதலாம்.
இதில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அதன்படி இந்த தேர்வு கடந்த 15-ந்தேதி ஓ.எம்.ஆர். சீட் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் சேலம், நாமக்கல்லை சேர்ந்த மாணவ-மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் 6,250 மையங்களில் 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
விடை குறிப்பு வெளியீடு
இதற்கான உத்தேச விடைக்குறிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து மாணவ- மாணவிகள் அந்த விடைக்குறிப்பை ஆர்வத்துடன் பார்த்து தாங்கள் எழுதிய விடை சரியாக உள்ளதா? என சரிபார்த்து வருகின்றனர். வெளியிடப்பட்ட இந்த உத்தேச விடையில் ஏதேனும் தவறாக இருந்தால் அதுபற்றி வருகிற 25-ந்தேதிக்குள் உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்