என் மலர்
நீங்கள் தேடியது "Jallikattu"
- உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. இதை வரவேற்று கொண்டும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலை சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் விழா குழுவினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் காளை களுக்கும், பொதுமக்க ளுக்கும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ் ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ் கூறுகையில், பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்தோம். எங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றனர்.
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை.
- போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது.
மதுரை:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து நடத்த கோரிய வழக்கின் விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்றும் போட்டியின்போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது என்றும் கூறினர்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.






