என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Convention"

    • தேர்தல் முடிவுகளை தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
    • மாநாட்டில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து அடுத்த மாதம் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

    தேர்தல் முடிவுகளை தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தனது அரசியல் பணியை வேகப்படுத்த தொடங்கியுள்ளார்.

    கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை 80 லட்சத்தை தாண்டிய நிலையில் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் புதிதாக சேர்க்கும் நடவடிக்கையில் விஜய் ஆலோசனையின் பேரில் தொண்டர்களை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஊக்கப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடு பணிகளில் நிர்வாகிகள் தீவிர மாக செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்கிறார்.

    மேலும் கட்சி கொள்கைகள் அடங்கிய பிரசார பாடல்கள் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கட்சியில் இணைய இருக்கின்றனர்.

    இதுபற்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் கட்சியில் இணைவதற்கு தயாராகி வருகின்றனர். முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள பல நிர்வாகிகள், முன்னாள் மேயர்கள், திரையுலக பிரபலங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர். அடுத்த மாதம் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிதாக கட்சியில் சேர இருப்பவர்கள் கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் இணைய இருக்கின்றனர். மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் விஜய் கட்சியில் உறுப்பினர்களாக சேர இருக்கின்றனர்.

    இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கட்சியில் சேருவோரின் பின்னணி, குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு அதன் பின்னரே கட்சியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பின்னணி இல்லாதவர்கள் கட்சியில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் கட்சியில் இணைய இருப்பது முன்னணி அரசியல் கட்சிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
    • அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

    மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதாவது:-

    மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

    அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

    குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார்.

    இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறி உள்ளார்.

    ×