என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mango tree"

    • சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
    • பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. விவசாயத்தை பொறுத்தமட்டில் நெல், காய்கறி சாகுபடி, பழ சாகுபடி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது.இதில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை வட்டாரத்தில் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், குமாரபாளையம், தேவனூர்புதூர், மானுப்பட்டி, மொடக்குப்பட்டி, உடுக்கம்பாளையம் உட்பட பகுதிகளில் 1,700 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஆறுக்கும் அதிகமான ரகங்கள் பராமரிக்கப்பட்டு, ஆண்டுக்கு இரு சீசன்களில் மாங்காய் அறுவடை செய்யப்படுகிறது.இந்த சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மா மரங்களில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கவாத்து செய்வதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அத்துறையினர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை சீசனுக்கு முன் மா சாகுபடியில் கிளை படர்வு மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.களைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த இடை உழவு செய்த பின் கொள்ளு, பாசிப்பயறு, தக்கைப்பூண்டு அல்லது மண் வளம் பெருக எளிதில் மட்கும் பயறு இனவகைகளை விதைக்க வேண்டும்.

    நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி கீழே விழுந்துள்ள இலைகளை சேகரித்து, மண் புழு உரக்குழி அல்லது மண்புழு கூடாரத்திலோ மட்க செய்ய வேண்டும்.மரங்களின் வளரும் தருணத்தில் மிக நெருக்கமாக உள்ள மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ளலாம்.

    ஆரோக்கியமாக உள்ள கிளையை விட்டு விட்டு குறுக்கே நிழல் பகுதியில் வளரும் சிறு கிளைகளையும், கவாத்து செய்ய வேண்டும். மரத்தில் 5 கிளைகள் இருந்தால் 2 முதல் 3 கிளைகள் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்யலாம்.கவாத்து வாயிலாக மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கிளை படர்வு மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், புதுக்கிளைகளில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 4 வகையான சுவையுடன் கூடிய 3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கருவறையில் உள்ள சாமி மணல் லிங்கமாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இப்படி புகழ்பெற்ற இந்த கோவில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார்.

    அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும்.

    இந்த மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட பழங்களை தருகிறது. மக்கள்பேறு இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் பழத்தை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தற்போது இந்த மாமரத்தில் 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த மாமரத்தை பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்


    ×