search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One way Traffic"

    சாத்தான்குளத்தில் ஒரு வழிப்பாதை நடைமுறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மெயின்ரோட்டில் ஏராளமான மளிகை, காய்கறி, ஜவுளி, நகைக்கடைகள் மற்றும் ஓட்டல்கள்,தொடக்க, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

    குறுகலான இந்த ரோட்டில் இருபுறமும் வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

    சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று முன்பு தாசில்தாராக இருந்த தம்பிராஜ் ஈனோக் ஒரு வழிப் பாதையை காவல்துறை உதவியுடன் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினார்.அதன் பிறகு மீண்டும் விதிமீறல் நடந்து தற்போது ஒரு வழிப்பாதை அறிவிப்பு பலகையே காணாமல் போய்விட்டது.

    வருகிற 13-ந் தேதி பள்ளிகளும் அதனைத் தொடர்ந்து கலை, அறிவியல், பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளும் இயங்க உள்ள நிலையில் காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே ஒருவழிப்பாதையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அதுவரை காலை,மாலை நேரங்களில் மட்டுமாவது போக்குவரத்து போலீசாரை நியமித்து ஒரு வழிப் பாதையை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×