search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaalnatthuthal"

    நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    நெல்லை:


    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா  விற்காக  கால் நாட்டுதல் நிகழ்ச்சி   இன்று நடந்தது. 

    விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
     
    அதனைத் தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    ஆனிப் பெருந்திருவிழா வின் தொடக்க நிகழ்ச்சியான புட்டபர்த்தி அம்மன் கோவில் திருவிழா வருகிற 5-ம் தேதியும், விநாயகர் திருவிழா 15-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

    ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 

    ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்  ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    ×