search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic stopped"

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள ஜெ.என்.சாலையில் தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

    இந்தநிலையில் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலை பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது தலைமை அரசு மருத்துவமனை அருகே லாரியின் சங்கிலி அறுந்து ராட்சத தூண்கள் சாலையில் விழுந்து சிதறின. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த லாரியின் அருகே சென்ற மற்ற வாகனங்களில் சென்றவர்கள் எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பினார்கள்.

    தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து உடனடியாக போக்கு வரத்தை நிறுத்தினார்கள். பின்னர் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் அனுப்பபட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

    ×