search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகளுக்கு தீ"

    • கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
    • 3 மணி நேரம் எரிந்து தானாக அணைந்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஏலகிரி மலை அடிவாரத்தில் சின்ன பொன்னேரி கிராமம் உள்ளது.

    இங்குள்ள நியூ காலனி பிளாட் அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள், 2 டன் குப்பைகளை வாகனம் மூலம் ஏற்றி வந்தனர்.மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள இடத்தில், குவியலாக கொட்டி தீ வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. அந்த பகுதி முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களில் எரிச்சலை உண்டாக்கியது. மேலும் அங்கு குடியிருக்கும் முதியவர்கள், குழந்தைகள் என பொதுமக்கள் நெடி தாங்க முடியாமல் மூச்சுத் திணறால் அவதிப்பட்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ தானாகவே அணைந்தது.

    எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரையில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
    • திண்டிவனத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளு ம்காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதி வழியாக சென்று வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளு ம்காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதி வழியாக சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் மலைபோல் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் போது கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டே முகத்தை மூடியவாறு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த குப்பைகளுக்கு அவ்வப்போது தீவைத்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் பற்றி தெரியாமல் செல்வதுடன் புகையினால் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள உயிர் மரங்களும் தீயில் எரிந்து போகிறது. இதுபோல் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதனால் இந்த பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் வேறு ஒரு இடத்தில் குப்பை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×