என் மலர்
நீங்கள் தேடியது "tag 119802"
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது.
இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
“ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் பேமென்ட் சேவை யு.பி.ஐ. மூலம் இயங்குகிறது. #MiPay
சியோமி நிறுவனம் Mi பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Mi பே சேவை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் இயங்குகிறது. இதனை பயன்படுத்த போன், கான்டாக்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான அனுமதியினை வழங்கினால் மட்டுமே இயக்க முடியும்.
பயனர்கள் தங்களது யு.பி.ஐ. முகவரி மற்றும் வங்கி அக்கவுண்ட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது. Mi பே சேவையை பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு சர்வெர்களிலேயே சேமிக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.
Mi பே சேவை காண்டாக்ட், எஸ்.எம்.எஸ்., ஸ்கேனர் செயலிகளினுள் MIUI தளத்தின் ஆப் வால்ட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிமையாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இத்துடன் மற்ற மொபைல் பேமென்ட் சேவைகளை போன்று மொபைல் போன் பில் / ரீசார்ஜ், டி.டி.ஹெச். ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்தலாம்.

பயனர்களின் முழு தகவல்களும் இந்தியா சார்ந்து இயங்கும் கிளவுட் சேவையில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் சேமித்து வைக்கப்படுவதாக சியோமி தெரிவித்துள்ளது. செயலியை சோதனை செய்தபின் Mi பே செயலியை MIUI 10 பீட்டாவில் அறஇமுகம் செய்து, தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
சியோமியின் Mi பே செயலி வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், Mi ஆப் ஸ்டோரில் பயனர்கள் இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். Mi பே செயலியை கொண்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது பயனர்கள் அதிகபட்சம் 100 ரெட்மி நோட் 7 போன்களையும், 50 Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 இன்ச் மாடல்களை வெல்ல முடியும்.
அமேசான் நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் செய்யும் அமேசான் பே யு.பி.ஐ. ஆப் ஆண்ட்ராய்டு வலைதளங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. #AmazonPay
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அமேசான் நிறுவனம் அமேசான் பே யு.பி.ஐ. அறிமுகம் செய்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு யு.பி.ஐ. ஐ.டி.க்களை வழங்க அமேசான் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்திருக்கிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை அமேசான் மொபைல் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து அதிவேக பணபரிமாற்றங்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அமேசான் பே யு.பி.ஐ. ஐ.டி. கொண்டு அமேசான் வலைதளத்தில் பொருட்களை வாங்கவோ, அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் போதோ, ரீசார்ஜ் அல்லது கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து செலுத்த முடியும்.

அமேசான் பே யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் மொபைல் வெரிஃபிகேஷன் மற்றும் யு.பி.ஐ. பின் பதிவிட்ட பின்னரே உறுதிசெய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை ஒருமுறை இணஐத்துக் கொண்டு யு.பி.ஐ. பின் செட்டப் செய்துவிட்டால், பின் இதை கொண்டு பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.
பிம் யு.பி.ஐ. வழிமுறையை டிஜிட்டல் பேமென்ட் முறையாக பயன்படுத்த அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இது பயன்தரும் சேவையாக இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் பே யு.பி.ஐ. தளம் மூலம் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் பே யு.பி.ஐ. பணபரிமாற்றங்களை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இருந்து அமேசான் சேவையில் லாக் இன் செய்து கொண்டு யு.பி.ஐ. சேவையை பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் அமேசானில் பொருட்களை வாங்கி, புதிய யு.பி.ஐ. மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.






