search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swayamvara Parvati Yagya"

    • சத்தியமங்கலம் அருகே பாலதண்டாயுதபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்ய ப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம் ரோடு கொடுமடுவு பால தண்டாயு தபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் இன்று நடந்தது.

    முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து சனிபகவான் தோஷம், நவ கிரக தோஷம், மாங்கல்ய தோஷம் ராகு, கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிகூஹத்தி தோஷம், நாக தோஷம், ருது தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை விலக சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வழிபாடு நடந்தது.

    இதைத் தொடர்ந்து பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து பார்வதி- பரமேஸ்வரன் திருக்கல் யாணம் நடந்தது. ஏற்கனவே நடந்த இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்ற 80 சதவீதம் பேருக்கு திருமணம் நடந்தது. அவர்கள் இந்த ஆண்டு தம்பதிகளாக பூஜையில் கலந்து கொண்டனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இட வசதி, உணவு ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்ய ப்பட்டது.

    இன்று நடந்த யாகத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் 9-ந் தேதி நடக்கிறது
    • பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம் ரோடு கொடுமடுவு பால தண்டாயு தபாணி கோவிலில் வரும் 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடக்கிறது. இதில் திருமணமாகாதா ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கி சனி பகவான் தோஷம், நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம் ராகு, கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிஹத்தி தோஷம், நாக தோஷம், ருது தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை விலக சிறப்பு பூஜைகள் மற்றும் விஷேச வழிபாடு நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து பார்வதி- பரமேஸ்வரன் திருக்கல் யாணம் நடக்கிறது. இதில் கலந்து கொண்ட 80 சதவீதம் பேருக்கு திருமணம் நடந்துள்ளது. அவர்கள் இந்த ஆண்டு தம்பதிகளாக பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த பூஜையில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது. பூஜை பொருட்கள் மற்றும் ஜாதக ஜெராக்ஸ்சுடன் கலந்து கொள்ள வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இட வசதி, உணவு ஆகிய வசதிகள் செய்யபப்ட்டு உள்ளது. மேலும் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி உள்ளது.

    திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    ×