என் மலர்
நீங்கள் தேடியது "surya vamsam"
- ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம்.
- சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் சரத்குமார், சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் தனது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'சூர்ய வம்சம்' படம் குறித்த நினைவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ''சூர்ய வம்சம் படம் ரிலீசான சமயத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களின் மனநிலை அறிய காத்திருந்தோம். அப்போது ஒரு இயக்குனர் என்னிடம் வந்து 'என்ன படம் எடுத்துள்ளீர்கள், இது எப்படி ஓடும்?' என்று கேட்டு சென்றார். எல்லோரும் சூப்பர் என்று சொல்லும் சூழலில், இவர் இப்படி சொல்லிட்டாரே... என்று யோசித்தேன். சில நேரம் நம் பார்வையை விட ரசிகர்களின் பார்வை வேறுவிதமானது என்பதையும் புரிந்துகொண்டேன்.
என்னை பொறுத்தவரை இன்று வரை தியேட்டர்களில் அதிக ரசிகர்கள் பார்த்த படம் என்றால், அது சூர்ய வம்சம் படம் தான். அதை உறுதியாகவே சொல்வேன்'', என்றார்.
- சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.
- இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதில், வில்லனாக நடித்திருந்த ஆனந்த்ராஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும், அவர் பயன்படுத்திய மரிக்கொழுந்து வாசனை திரவியம் அந்த காலத்தில் அவ்வளவு பேமஸாக இருந்தது. இந்த படத்தில் சரத்குமார் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்ற இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.
மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தேவயானி செய்த இட்லி உப்புமா தாக்கம் இன்றுவரை உள்ளது.

இந்நிலையில், 'சூர்யவம்சம்' திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!
விரைவில் சூர்யவம்சம் - 2!..." என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'சூர்யவம்சம்' இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






