என் மலர்
நீங்கள் தேடியது "surveyor arrested"
பெரியகுளத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.
அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.
அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






