என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளத்தில் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது
Byமாலை மலர்20 Jun 2018 3:52 AM GMT (Updated: 20 Jun 2018 3:52 AM GMT)
பெரியகுளத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.
அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.
அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X