search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide woman"

    கணவர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வினோபா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (வயது44). இவர் தனியார் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (30) இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்குமார் (12)என்ற மகனும், ஹனிஷ்கா (10) என்ற மகளும் உள்ளனர்.

    லட்சுமி கணவரிடம் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு ரகு மறுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகாலட்சுமி கணவரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு ரகு ஒருநாள் வேலைக்கு செல்லாமல் இருந்தால் கூட குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக உள்ளது என்று கூறினார்.

    இந்த நிலையில் கணவர் வீட்டு வாரண்டாவில் தூங்கினார். குழந்தைகளும் விளையாட சென்று விட்டனர். மகாலட்சுமி வீட்டில் உள்ள அறைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து ரகு அறைக்கதவை தட்டினார் ஆனால் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி மகாலட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.

    மூலகுளத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தொப்புளான். இவரது மனைவி அகஸ்தினி (வயது 56). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே 2 மகள் மற்றும் இளைய மகனுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் மூத்த மகன் செந்தமிழனுக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை. இதனால் அகஸ்தினி மனவேதனையில் இருந்து வந்தார்.

    மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததை பலரிடம் கூறி அகஸ்தினி வருத்தப்பட்டு வந்தார். நேற்று மகன் வேலை முடிந்து வீடு திரும்பியதும் செந்தமிழனிடம் திருமணம் பற்றி அகஸ்தினி பேசினார். அப்போது செந்தமிழன் இனிமேல் திருமணம் பற்றி யாரும் பேச வேண்டாம் என கூறி விரக்தியுடன் வீட்டின் மாடிக்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த அகஸ்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தொப்புளான் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அகஸ்தினியை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அகஸ்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×