என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide Prevention"

    • முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு தினவிழா நடந்தது.
    • இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக இந்த விழிப்புணர்வு தினம் நடத்தப்பட்டது.

    கீழக்கரை

    இன்றைய காலச் சூழலில் மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தற்கொலை என்பது ஒரு எளிதான நிகழ்வாக இருக்கின்றது. இதனை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக தற்கொலை தினம் விழிப்புணர்வு தினமாக நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக தற்கொலை தடுப்பு தினவிழா கல்லூரியின் செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.

    முன்னதாக இளையோர் செஞ்சிலுவை சங்கம் திட்ட அலுவலர் காளிஸ் பிரபு வரவேற்றார். ராமநாதபுரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் அமைப்பு மோகனப்பிரியா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர் நம்பு கம்லி நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.
    • ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தேசிய மன நல திட்டம் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன்னிட்டு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரத்துறை அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.

    ஊர்வலத்தை சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தற்கொலை தடுப்பு சம்பந்தமாக அரசு ஆஸ்பத்திரியில்நடந்த கருத்தரங்கை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி,மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மன நல திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் கெஜலட்சுமி தற்கொலை தடுப்பு முறை கள், அவற்றை எப்படி கையாளுவது என்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    முடிவில் டாக்டர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    ×