search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suice"

    • சென்னையில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வந்தார்.
    • அங்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வட்டக் காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம், விவசாயி. இவரது மகள் திரிஷா (21), பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ள இவர் சென்னையில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் குளிக்க சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை தட்டி பார்த்த போது நீண்ட நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதற்கிடையே அங்கு வந்த கருப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே திரிஷா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றையும் மீட்டு போலீசார் ஆய்வு நடத்தி விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×