search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suggestion"

    • அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரை
    • இந்த வருடம் பணிகள் விரைவில் மேற்கொள்ள ப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது

    அரியலூர்,

    உலக அளவில் ஈர நில ங்களை பாதுகாக்க ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள ப்பட்டது.ராம்சர் தளங்கள் ஈரா னில் 1971ல் கையெழுத்தி டப்பட்ட ராம்சர் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈரானில் கையொப்பமிடப்பட்ட ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்,இது ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தி சாலித்தனமான பயன்பா ட்டிற்கான தேசிய நடவடி க்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்ட மைப்பை வழங்குகிறது.அதன்படி தமிழகத்தில் 14 ராம்சர் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டி யலில் இணைக்கப்பட்டது.தற்போது மாநிலத்தில் உள்ள கரைவெட்டி பறவை கள் சரணாலயம் உள்ளிட்ட மேலும் சில இடங்களை சேர்க்க தமிழக அரசு ராம்சர் தளத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.ராம்சர் தளத்தில் இருப்ப தற்கு அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்ட ஒன்பது அளவுகோல்களில் ஒன்றை யாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதில் கரை வெட்டி பறவைகள் சரணா லயம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் இருக்கும் அல்லது ஆபத்தான உயிரினங்களை ஆதரிப்பது,20 ஆயிரத்துக்கும் மேற்ப ட்ட நீர்ப்பறவைகள் இரு ப்பது, அல்லது மீன்கள், முட்டையிடும் இடம் என பல அம்சங்களை உள்ளட க்கியதாக உள்ளது.மாநிலத்தில் 82 நீர்ப்ப றவைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சரணாலயம் அடிப்படை யானது.

    இந்த சரணாலயம் புலம் பெயர்ந்த நீர் பறவைகளுக்கு மிக முக்கியமான நன்னீர் உணவளிக்கும் இடமாகும். இந்த நீர் நிலைக்கு வரும் முக்கியமான பார்வை யாளர்களில் ஆபத்தில் இருக்கும் பார் ஹெட் வா த்தும் உள்ளது. அரியலூர் மாவட்டத்தின் அதிகா ரப்பூ ர்வ இணைய தளத்தி ன்படி, பறவைக ளைப் பார்ப்பதற்கு சரணால யத்திற்குச் செல்ல சிறந்த நேரம் அக்டோபர் - மார்ச் மாதங்களாகும்.ஏற்கனவே இந்த பறவை கள் சரணால யத்தை மேம்ப டுத்த மாநில அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, துறை மானியத்தின் போது, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.இந்த வருடம் பணிகள் விரைவில் மேற்கொள்ள ப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.இதற்கிடையே கரைவெ ட்டி பறவைகள் சரணால யத்தை ராம் சர் தளத்தில் சேர்க்க பரிந்துரை செய்து ள்ள நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர்மதிவேந்தன், போக்குவ ரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், முதன்மை தலைமை வனப் பாதுகா வலர் சுப்ரத் மொகபத்ரா, கலெக்டர் அன்னே மேரி ஸ்வர்ணா ஆகியோருடன் பறவைகள் சரணாலயத்தி ற்குச் சென்று வளர்ச்சி த் தேவைகள் மற்றும் வசதிக ளை மதிப்பீடு செய்தனர்.காரைவெட்டி பறவை கள் சரணாலயத்தை புன ரமைத்து புதியதாக மாற்ற தேவையான அனை த்து நடவடிக்கைகளும் எடு க்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

    ×