search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudalai Madasamy"

    • பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி சுவாமி கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
    • பொதுமக்கள் முழு வாழைப்பழ தார்களை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும். இக்கோவிலில் சிறப்பு திருவிழாவாக பழம் படைத்தல் விழா மார்கழி மாதம் 2-வது வெள்ளி அன்று தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அந்த ஊரில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் முழு வாழைப்பழ தார்களை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தும் அனைவரும் சுவாமிக்கு வரிசையில் நின்று மாலை சாத்தியும் வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×