search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subsidized cost"

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.
    • இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கினார்.

    உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார். நிகழ்ச்சியில் புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையிலான பவர் டில்லர் எந்திரம், தென்ன மரக் கன்றுகள், பழக்க ன்றுகள் கத்திரிக்கன்றுகள், உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய செய லா ளரும், உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவருமான ராஜவேல், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலா ளருமான வைத்தியநாதன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், முன்னாள் மாவட்ட கவு ன்சிலர் விஜ யகுமார், தொல்காப்பியன், பத்ம நாபன், ஒன்றிய கவுன்சி லர்கள் ஜெயக்குமார், பழனிவேல், கணேசன், பாக்கியராஜ், ஆறுமுகம், சண்முகம், சர்தார், மனோகர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அரசு அதிகாரிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் சாணத்தை இயற்கை விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வறட்சி ஏற்பட்டு கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.ஆண்டுதோ றும் மார்ச்,ஏப்ரல்,மே,ஆகிய மாதங்களில் வறட்சி ஏற்படும் என்பதால் கால்நடைத்துறையினர் தீவனத்தை மானிய விலையில் கால்நடைகளை வளர்ப்போருக்கு வழங்குவார்கள். இதன்படி 1 மாட்டுக்கு தினமும் 3 கிலோ வீதம் வாரத்துக்கு 21 கிலோ தீவனம் வழங்கப்ப ட்டது.குறிப்பாக 4 முதல் 5 தீவன வங்கிகள் அமைக்க ப்பட்டு, சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்ட உலர் தீவன ங்களும் மானிய விலையில் வழங்கப்பட்டன.

    இதனால் பால் உற்பத்தி பாதிக்க ப்படாமல் தடுக்கப்பட்டது டன் கால்ந டைகளை அடிமாடுகளாக விற்பனை செய்வதும் குறைந்தது.அந்த வகையில் தற்போது கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் மற்றும் உளுந்து விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது
    • விவசாயிகளும் மானிய விலையில் நெல் மற்றும் உளுந்து விதைகளை வாங்கி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்தார்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லுர் மற்றும் வல்லநாடு வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் மற்றும் உளுந்து விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதைகள் அம்பை 16, கோ 51, டிகேஎம் 13, டிபிஎஸ் 5 ஆகிய ரகங்கள் கிலோவிற்கு ரூ.17.5 மற்றும் ரூ.20 மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (உணவு ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு) திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் மதுரை 1, வம்பன் 8 ஆகிய ரகங்கள் கிலோவிற்கு ரூ.25 மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    கருங்குளம் அனைத்து வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகளும் மானிய விலையில் நெல் மற்றும் உளுந்து விதைகளை வாங்கி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




    ×