search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subramaniaswamy"

    • சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம்.இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களின் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற் றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிர மணியசுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் கொடி கம்பத்தில் திருவிழாவிற் கான கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.இதில் பக்தர்கள் திரளான கலந்து கொள்வார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஏப்ரல் 6-ந் தேதியும், பட்டாபிஷேகம் 7-ந் தேதியும், மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் முன்னிலை யில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8-ந் தேதியும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ந்தேதி நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×