search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub-health center"

    • கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    துணைத் தலைவர் ராஜசேகர், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன், உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவானந்தன், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தன்,

    சுரேஷ், இ.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜ்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், ஒன்றிய குழு துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி செயலர் ஜெயபாண்டி கலந்து கொண்டனர்.

    • அணைக்கரைப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதாரநிலையம் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு துணை சுகாதா நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா நோய் தொற்று இருந்ததால், அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களை மீட்டெடுத்த துறை

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகும்.

    இதன்மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு, பொதுமக்களை பாதுகாத்து வருகிறார். இது தவிர, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பரிசோதனை மேற்கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் வழங்கியும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் நலனும் காக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புற–மக்களுக்கு பயனுள்ள வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 12 நடமாடும் மருத்துவமனைகள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. அணைக்கரைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையானதாகவும், பயனுள்ள வகையிலும் இங்கு நிரந்தர கட்டிடத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், யாதவா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மூலம், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சாரத் திருவிழா, சாதனைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    ×