search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students of Agriculture Department College"

    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விதை நேர்த்தி செய்யும் முறையின் செயல் விளக்கம் மாணவிகளால் நடத்தப்பட்டது.
    • பின்னர் அதன் பயன்கள் விளக்கப்பட்டன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகளின் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தின் கீழ் வெங்காயத்தில் வேர் அழுகல் நோயை கட்டுப்படு த்துவதற்காக விதை நேர்த்தி செய்யும் முறையின் செயல் விளக்கம் மாணவிகளால் நடத்தப்பட்டது.

    இதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்திருந்த அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், வெள்ளையம்பாளையம், அண்ணா மடுவு, சங்கரா பாளையம், பர்கூர் மலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து திருந்த விவசாயிகள் மாணவிகள் கூறும் செயல்விளக்கத்தை கேட்டுஅதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் அதன் பயன்கள் விளக்கப்பட்டன.

    இதில் கல்லூரி மாணவிகள் ராகவி, ராய்ஸ் டெல்பின் ராணி, ரேணுகா, ரியானா பேகம், சந்தியா, சங்கவி, சசிகலா, சாலினி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் கார்த்திகேயன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×