search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steps should be"

    • ராட்டை சுற்றிபாளையம் காலனி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
    • தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டுக்கு உட்பட்ட ராட்டை சுற்றிபாளையம் காலனி பகுதி மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு வழங்கினர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டு பகுதி காலனியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கிறோம். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் 2 கி.மீ. சென்று எடுத்து வருகிறோம்.

    பல வீடுகளில் வயதானவர்களாக உள்ளதால் தண்ணீர் எடுத்து வர சிரமமாக உள்ளது. நல்ல தண்ணீர் பைப்லைன் வழங்க வேண்டும்.

    எங்கள் பகுதி வழியாக பிரதான குடிநீர் குழாய் செல்வதால் பொது குழாய் அமைத்து அல்லது தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.

    எங்கள் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் அரசு சலுகை பெற முடியவில்லை. பட்டா கோரி விண்ணப்பித்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டா வகையில் உள்ளதாக கூறுகின்றனர்.

    எங்கள் பகுதிக்கு சாலை, கழிவு நீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். மழை காலங்களில் சிரமப்படுகிறோம்.

    எங்கள் பகுதிக்கு தனியாக சமுதாய கூடம் அமைத்து கொடுத்தால், எங்களது குடும்ப நிகழ்வுகள், மக்களுக்கான பணிகளை வைத்து செயல்படுத்த வாய்ப்பாகும். எங்கள் சமுதாயத்துக்கு தனியாக மயானம் ஒதுக்கி, சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    ×