search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stashed in the house seized"

    • கடையில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா விக்னேசை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீ சார் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விறபனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்ய ப்பட்டது தெரிய வந்தது.

    இதை யடுத்து அந்த கடை உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோபி செட்டிபா ளையம் மொடச்சூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் குட்கா பொருட்கள் வாங்கி விற்பனை செய்வதாக தெரிவி த்தார்.

    இதையடுத்து போலீசார் கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தி னர்.

    இதில் அவர் கோபி அடுத்த களரா மணி பகுதியை சேர்ந்த ராஜா விக்னேஷ் (33) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீ சார் களராமணி பகுதியில் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் மூட்டை மூட்டை யாக தடை செய்ய ப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர். இதில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 1250 சிறிய பண்டல்கள் கொண்ட 127 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா விக்னேசை கைது செய்த னர். இதை தொடர்ந்து அவர் கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்க ப்பட்டார். இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×