என் மலர்
நீங்கள் தேடியது "started with"
- விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பாலாலய பூஜை நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டு பழமை வாய்ந்த கரிவரத ராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்ச்சியாக விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பாலாலய பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து கருத்திருமராய பெருமாள். கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வேணுகோபால சுவாமி உடனமர் ராதா ருக்மணிக்கு அத்தி மரத்தினால் ஆன உருவ சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டது.
இதையடுத்து தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
கோவில் திருப்பணிகள் முடிந்து இன்னும் ஒரு ஆண்டில் கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பா பிஷேகம் நடைபெறும் என திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.






