search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sriperumbudur students dies"

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன் மாகேஷ், அதே பகுதியை சேர்ந்த ஜெகத் (16). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

    நேற்று இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலி பகுதியில் கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் சென்றனர்.

    பின்னர் அவர்கள் பீமன்தாங்கல் ஏரியில் நண்பர்களுடன் குளித்தனர். அப்போது மாகேசும், ஜெகத்தும் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினர். உடன் சென்ற நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் மூழ்கிய இருவரின் உடலை தேடி வருகிறார்கள். மாகேசின் உடல் கிடைத்தது. இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    ×