search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinivasa Mangapuram Kalyana Venkateswara Swamy Temple"

    • கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவாரி மெட்டு அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வர சுவாமி பார்வேடு உற்சவம் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி ஊர்வலம் ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள பார்வேடு மண்டபத்தை வந்தடைந்தது. அங்கு பார்வேடு உற்சவம் நடைபெற்றது. ஆஸ்தானம் முடிந்து மாலையில் உற்சவர்கள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் அன்னமாச்சார்யா திட்டத்தின் கீழ் கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர். பஜனை குழுவினர் பஜனை, கோலாட்டம் நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • உற்சவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இன்று பார்வேடு உற்சவமும், ஆஸ்தானமும் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் சாத்காத்கார வைபவ உற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது.

    காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை சீனிவாசமங்காபுரத்தை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவமும், ஆஸ்தானமும் நடக்கிறது.

    • நாளை முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
    • 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவரை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தூய தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரனம், கஸ்தூரி மஞ்சள், பச்சகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற நறுமண பொருட்கள் அடங்கிய திரவியத்தை கோவில் முழுவதும் தெளித்தனர். மதியம் 12.30 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    உற்சவத்தின் ஒரு பகுதியாக நாளை இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகன வீதிஉலா, 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியைச் சேர்ந்த பக்தர் நரசிம்மன் என்பவர் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான திரைசீலையை காணிக்கையாக வழங்கினார்.

    • வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த உற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட புத்தகம் திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் வெளியிடப்பட்டது. திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று வருடாந்திர வைபவ உற்சவ விவரம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, அர்ச்சகர் நாராயண தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
    • அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதையொட்டி 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    அன்று அதிகாலை கோவிலில் மூலவர்களுக்கு பூஜைகள் முடிந்ததும் மூலவர் சன்னதியில் இருந்து நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சாக்ஷாத்கார வைபவ உற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதை முன்னிட்டு 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 2-வது நாள் அனுமந்த வாகன வீதிஉலா, 3-வது நாள் கருட வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன வீதிஉலா தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.

    3 நாள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்ததும், 27-ந்தேதி ஸ்ரீவாரிமெட்டு அருகே அமைந்துள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது. சாக்ஷாத்கார வைபவ உற்சவத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி திருப்பாவாடை சேவை, 24-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை நடக்கும் ஆர்ஜித கல்யாணோற்சவம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வந்தது.

    3-வது நாளான நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திர மூர்த்தி, ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அத்துடன் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    • நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், தோமாலை சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து ஆஸ்தானம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • வசந்தோற்சவம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • நாளை தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    முதல் 2 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மற்றும் 3-வதுநாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் மற்றும் ருக்மனி, சத்தியபாமா சமேத கிருஷ்ணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று முன்தினம் மாலை புஷ்ப யாகம் நடந்தது.

    அதையொட்டி அன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    மதியம் 2 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி என 12 வகையான மலர்களும், 6 வகையான இலைகளும் சேர்த்து மொத்தம் 3½ டன் எடையிலான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஷ்ப யாகத்துக்கு பயன் படுத்தப்பட்ட மலர்களை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், காணிக்கையாளர்களும் வழங்கினர்.

    • இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
    • மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் சாஸ்திர பூர்வமாக புண்யாவதனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகமும் நடக்கிறது. இதனால் இன்று கோவிலில் நடக்க இருந்த நித்ய கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-வது நாளான நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதையடுத்து புஷ்கரணி எதிரில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணவெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியார் உற்சவர்களுக்கு விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், முக சுத்தம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் செய்தார். மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தாா்.

    அப்போது புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், விஷ்ணுசூக்தம், வேத மந்திரங்கள், பஞ்சசூக்த மந்திரங்கள் வேத பாராயணர்களால் ஓதப்பட்டது. சாமிக்கும், தாயார்களுக்கும் பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    திருமஞ்சனம் முடிந்ததும் காலை 9.40 மணியளவில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் 3 முறை நீரில் மூழ்கியெடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

    அப்போது கோவில் அதிகாரிகள், பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து புஷ்கரணியில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரம்ேமாற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இதோடு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

    பானு சுவாமி, வம்சி சுவாமி ஆகியோர் போட்டுவில் சுவையான பிரசாதங்களை தயாரித்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கினர். கருட சேவை மற்றும் தேரோட்டத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். பக்தர்களும் தினமும் 100 ஸ்ரீவாரி சேவா சங்கத்தினர் சேவை செய்தனர். சுமார் 1500 பக்தர்கள் மருத்துவ வசதிகளை பெற்றனர்.

    பிரம்மோற்சவத்துக்காக 10 டன் மலர்கள் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. மலர் அலங்காரத்துக்காக 50 தோட்ட ஊழியர்கள் இரவும் பகலும் பாடுபட்டனர். அவர்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த பூக்களை அலங்காரத்துக்கு பயன்படுத்தினர்.

    கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 75 துப்புரவுப் பணியாளர்களும், முக்கியமான நாட்களில் கூடுதலாக 25 பணியாளர்களும் கோவில் வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தனர்.

    ×