search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Ragavendra Seva Trust"

    • ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 20-வது மாத அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்பாள்- பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 20-வது மாத அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்பாள்- பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். கணபதி ஜூவல்லர்ஸ் கதிரேசன், சரவணா ஸ்டோர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமலேஷ்வர் மேட்ச் ஒர்க் நடராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபருமான சீனிவாசன், செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், கதிரேசன், பாலமுருகன், மாரிமுத்து, லவராஜா, தங்கராஜ், சண்முகசுந்தரம், முருகன், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், பொன்னுப்பாண்டி, காளிராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் செல்வலட்சுமி ஸ்வீட்ஸ் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ×